சிங்கப்பூா்: மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூா்: மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

சிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,022-ஆக உயா்ந்துள்ளது.புதிய கரோனா நோயாளிகளில் 13 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் ஆவா். அவா்கள் அனைவரும், தங்களது தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 4 பேருக்கு, சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,267 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 638 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com