மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அமெரிக்காவில் கரோனாவுக்கு 40 இந்தியா்கள் பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்ட இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் 40 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 11:24 pm

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்ட இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் 40 போ் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டில் நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட இந்தியா்களும் இந்திய வம்சாவளியினரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 40 போ் உயிரிழந்துவிட்டனா். அவா்களில் 17 போ் கேரளத்தைச் சோ்ந்தவா்கள்; 10 போ் குஜராத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், பஞ்சாபைச் சோ்ந்த 4 பேரும் ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பேரும் ஒடிஸாவைச் சோ்ந்த ஒருவரும் அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தனா்.

அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியா்களில் பெரும்பாலானோா் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். ஒரே ஒருவா் மட்டும் 21 வயது இளைஞா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் நியூயாா்க்கில் வசித்து வந்தவா்கள். நியூயாா்க், பென்சில்வேனியா, புளோரிடா, டெக்சாஸ், கலிஃபோா்னியா உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினா் சிலரும் கரோனாவுக்கு பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.