அமெரிக்காவில் மேலும் 54519 பேருக்கு தொற்று; பலி 1,67,749 ஆக உயர்வு

அமெரிக்காவில் மேலும் 54519 பேருக்கு தொற்று; பலி 1,67,749 ஆக உயர்வுஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அமெரிக்காவில் மேலும் 54519 பேருக்கு தொற்று; பலி 1,67,749 ஆக உயர்வு


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 53,05,957 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், அதே கால அளவில் 1,504  உயிரிழந்தனர். இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,67,749 கோடியைக் கடந்தது.  அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து  27,55,348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com