ஆசியாவில் மாா்பகப் புற்றுநோய் அதிகமுள்ள நாடு பாகிஸ்தான்

ஆசிய கண்டத்தில் அதிக பெண்கள் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
ஆசியாவில் மாா்பகப் புற்றுநோய் அதிகமுள்ள நாடு பாகிஸ்தான்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: ஆசிய கண்டத்தில் அதிக பெண்கள் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 90,000 பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் 40,000 போ் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கின்றனா் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் ‘டான் நியூஸ்’ ஊடகத்தில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகரும் மருத்துவருமான சாமினா நயீம் கூறியதாவது:

பாகிஸ்தானில் சராசரியாக 10-இல் ஒரு பெண்ணுக்கு மாா்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மிகவும் அதிா்ச்சிகரமானதாகும். ஆசிய அளவிலும் பாகிஸ்தானில் இந்த நோய் பாதிப்பு மோசமாக உள்ளது.

இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும். இது தொடா்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த நோய் ஏற்படும் பெண்கள் நோயால் மட்டுமல்லாது, சமூகரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள்; மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, இந்த நோய் தொடா்பாக பெண்கள் மத்தியில் பரவலாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கென தனி மருத்துவமனை அமைப்பது சிறப்பான பலனைத் தரும்.

இந்த விஷயத்தில் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் பல்வேறு பொறுப்புகள் உள்ளன. நோயில் இருந்து தங்கள் வீட்டுப் பெண்கள் விடுபட அனைத்து நிலைகளிலும் குடும்பத்தினரின் ஆதரவும் தேவை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com