கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொருளாதார நிபுணர் சர். ஆர்தர் லூயிஸ்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!

உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ் நோபல் பரிசு பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

News image

சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ்

Updated On :10 டிசம்பர் 2020, 6:07 am

DIN

உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ் நோபல் பரிசு பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

வளரும் நாடுகளை பாதிக்கும் பொருளாதாரக் காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டமைக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு சர் லூயிஸ் நோபல் பரிசு பெற்றார். 

சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ்

பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ், கரீபியன் தீவான செயின்ட் லூசியாவில் உள்ள காஸ்ட்ரீஸில் 1915,  ஜனவரி 23ல் பிறந்தார். ஆரம்பத்தில் பொறியியல் படிக்க ஆசைப்பட்ட அவர் கறுப்பின பாகுபாட்டால் பொருளாதாரத் துறையைத் தேர்வு செய்தார். 

இன பாகுபாட்டுக்கு மத்தியிலும், அவர் 1932 ஆம் ஆண்டில் அரசின் உதவியுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரம் பயின்று பிற்காலத்தில் பொருளாதாரம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் முனைவர் பட்டம் பெற்றார். 

1954 ஆம் ஆண்டில், பொருளாதாரம் குறித்த 'வரம்பற்ற தொழிலாளர்களுடன் கூடிய பொருளாதார மேம்பாடு' என்ற தனது கட்டுரையை வெளியிட்டார். 1979ல் நோபல் பரிசும் பெற்று சாதனை படைத்தார். 

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதல் கறுப்பின ஆசிரியராகவும், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் (மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்) சிறப்பு இருக்கை பெற்ற முதல் கறுப்பினத்தவர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராக இருந்த முதல் கறுப்பின ஆசிரியர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார்.

1963 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 1991 ஜூன் 15ல் மறைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.