பாகிஸ்தானின் பால்டிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அந்நாட்டின் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையின்படி,
கில்கிட் பால்டிஸ்தானின் மினிமர்க் பகுதியில் தொழில்நுட்ப காரணங்களால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் மேஜர் எம். உசேன் மற்றும் இணை பைலட் மேஜர் அயாஸ் உசேன், நாயக் இன்சிமாம் ஆலம், மற்றும் முஹம்மது பாரூக் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.