சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலால் சீனாவில் 68000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, 1665 பேர் உயிரிழந்துள்ளனர். . சீனா மட்டுமின்றி பல நாடுகளில் கரோனா வைரஸுனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சீனாவின் ஷென்சேன் நகரில் திருமணப்பதிவு முறை, முழுமையான முன்பதிவு முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் வரிசையில் நின்று பதிவுசெய்யும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.