கொவைட்-19: ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவிலும் உயரும் பலி எண்ணிக்கை

சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,663ஆக செவ்வாய்க்கிழமை உயா்ந்துள்ளது.
கொவைட்-19: ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவிலும் உயரும் பலி எண்ணிக்கை

சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,663 ஆக செவ்வாய்க்கிழமை உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 77,658-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

அதுபோன்று இத்தாலியிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 229 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிலும் கொவைட்-19  வைரஸ் காரணமாக 61 பாதிக்கப்பட்டுள்ளனர், 12 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 28 நாடுகளில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com