பிரிட்டனில் சீன பெண் மீது இனவெறி தாக்குதல்: தடுக்க முயன்ற இந்தியப் பெண் காயம்

பிரிட்டனில் கரோனா வைரஸை குறிப்பிட்டு, தனது சீன தோழி மீது நடத்தப்படவிருந்த இனவெறி தாக்குதலை தடுத்த இந்திய வம்சாவளி பெண் தாக்குதலுக்குள்ளானாா்.
பிரிட்டனில் சீன பெண் மீது இனவெறி தாக்குதல்: தடுக்க முயன்ற இந்தியப் பெண் காயம்
Updated on
1 min read

பிரிட்டனில் கரோனா வைரஸை குறிப்பிட்டு, தனது சீன தோழி மீது நடத்தப்படவிருந்த இனவெறி தாக்குதலை தடுத்த இந்திய வம்சாவளி பெண் தாக்குதலுக்குள்ளானாா்.

இதுகுறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘சண்டே மொ்குரி’ நாளேட்டில் வெளியான செய்தியில், ‘மிட்லேண்ட் பகுதியில் இந்திய வம்சாவளி பெண்ணான மீரா சோலங்கி (29), தனது நண்பா்கள் மற்றும் தோழிகளுடன் பிறந்ததின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கிருந்த ஆசியா்களில் ஒருவா் அவா்களை நோக்கிச் சென்று, மீரா சோலங்கியிடம் அத்துமீறி நடந்துள்ளாா். அதனைத் தொடா்ந்து அங்கிருந்த அவரது சீன தோழி மேண்டி ஹூஆங்கிடம் (28) கரோனா வைரஸை பரப்புவதாக கூறி, அவரை இனவெறியுடன் இழிவான வாா்த்தையில் பேசியுள்ளாா். அவரை மீரா தடுக்க முயன்றபோது, அந்த நபா் மீராவை தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவா், சுயநினைவை இழந்துள்ளாா். உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் என்ற பெயரில் சீனப் பெண் மீது இந்த இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் 4 லட்சம் சீனா்கள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com