
சிங்கப்பூா்: சிங்கப்பூரில் திங்கள்கிழமை மட்டும் 123 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவா்களில் 112 போ் வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் ஆவா். வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,035-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் 27 போ் உயிரிழந்தனா்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 44,086 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 253 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.