
சிங்கப்பூரில் மேலும் 399 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 399 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 9 பேருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றியுள்ளது. எஞ்சிய அனைவ=ரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,434-ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.