அமெரிக்காவில் நேற்றைவிட இருமடங்கு உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 819 பேர் பலியாகியுள்ளனர். 
அமெரிக்காவில் நேற்றைவிட இருமடங்கு உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் பலி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 819 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 819 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,11,751 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,73,803 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 7.73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் முந்தைய நாளை ஒப்பிடுகையில் இன்று இருமடங்கு பலி பதிவாகியுள்ளது. நேற்று கரோனாவுக்கு  450 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com