சீனாவில் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஜுன் 14ஆம் நாள் 17ஆவது இரத்த தானம் செய்பவர்கள் தினமாகும். சீனத் தேசிய சுகாதார மற்றும் உடல் நலக் கமிட்டி வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, சீனாவில் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை, 1998ஆம் ஆண்டிலிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரத்திலிருந்து 2019ஆம் ஆண்டில் 1 கோடியே 56 இலட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்தது.
இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் இரத்த அளவும் தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்