மக்களுக்கு முதலிடம், மக்களைச் சார்ந்திருத்தல், மக்களுக்கு நன்மை பயத்தல் ஆகிய அம்சங்கள், மக்களுக்குச் சீன அரசின் கொள்கைகளிலும் நடைமுறைப் பணிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரச் சமூக வளர்ச்சியிலும் இவை ஒருங்கிணைப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு, சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த” மக்களுக்கு முதன்மை” என்ற கருத்து மீண்டும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.
மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக் கருத்து, ஷிச்சின்பிங் சிந்தனையில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவ்வாண்டில் நிங்சியா, ஷாங்க்சி, ஷான்சி, யுன்னான் முதலிய சீனாவின் பல இடங்களில் ஷிச்சின்பிங் பயணம் மேற்கொண்டார். ”மக்களே முதன்மை” என்ற வளர்ச்சிக் கருத்தை அவர் இப்பயணங்களில் அடிக்கடி தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்