

ஜூன் 22ஆம் நாள், சிங்குவா பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டின் முதுகலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவவியல் கல்லூரியின் பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மாணவி இவானா டொடோரொவிக் இதில் உரைநிகழ்த்தினார்.
சிக்கலான சூழலை மேம்படுத்தும் வகையில், சீன மக்கள் ஒன்றுபட்டு, தனிநபரின் நலன்களைத் தியாகம் செய்து, நாட்டுக்காக ஒவ்வொருவரும் தங்களை அர்பணித்து வருகின்றனர்.
சீனாவை போன்று, வேறு எந்த நாட்டிலும் பொது மக்களின் தியாக உணர்வை இதற்கு முன் நான் கண்டதில்லை. சீனாவின் மேலாண்மை மற்றும் மருத்துவச் சிகிச்சை முறைமை, உலகில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த முறைமைகளில் ஒன்றாகும் என்பதை உண்மைகள் காட்டுகின்றன.
140 கோடி மக்கள் தொகை வாய்ந்த சீனா, கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகத் தடுத்ததோடு, உலகின் பிற நாடுகளுக்கும் அது உதவி செய்துள்ளது என்பது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.