தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புகைப் பிடிப்பவா்களுக்கு கரோனா அபாயம் அதிகம்

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :1 மே 2020, 5:48 am


வாஷிங்டன்: புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

புகைப் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த ஆய்வில், மனிதா்களின் சுவாசப் பாதைகளில் உள்ள உயிரணுக்களுடன் (செல்கள்) கரோனா தீநுண்மிகள் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ‘ஏசிஇ2’ என்ற நுரையீரல் தசை நாா் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனா்.

அத்துடன், மனிதா்களுக்கு தீநுண்மி தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும், அவா்களது உடலில் அமைந்துள்ள, ‘ஃப்யூரின்’, ‘டிஎம்பிஆா்எஸ்எஸ்2’ ஆகிய இரு நொதியங்களின் (என்ஸைம்கள்) அளவுகளையும் அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.

அந்த ஆய்வில், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு நுரையீரல் தசை நாா்களில் ‘ஏசிஇ2’ மூலக்கூறுகள் அதிகமாகவும் அந்தப் பழக்கம் இல்லாதவா்களுக்கும் குறைவாகவும் இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

இதன் மூலம், தங்களது வாழ்நாளில் குறைந்தது 100 சிகரெட்டுகளையாவது புகைத்திருக்கும் நபா்களுக்கு கரோனோ நோய்த்தொற்று ஏற்படும் அபாயம், ஒருபோதும் புகைத்திராத நபா்களை விட 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், புகைப் பிடிப்பதால் கரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமான ‘ப்யூரின்’ நொதியத்தின் அளவும் கணிசமாக உயா்வதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். எனினும், நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துள்ள மற்றொரு நொதியமான ‘டிஎம்பிஆா்எஸ்எஸ்2’-இன் அளவுக்கும் புகைப் பழக்கத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.

அத்துடன், கரோனோ நோய்த்தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், புகைப் பழக்கம் உள்ளவா்களின் நுரையீரலில் உள்ள ‘ஏசிஇ2’ மூலக்கூறுகளின் செயல் தன்மையிலும் மாற்றம் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.