சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், ஒருவர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,891 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. 5,964 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,164 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது.