பாகிஸ்தானில் கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 58,278-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 573 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58,278-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கரோனா நோய்த்தொற்று காரணமாக பலியானவா்களின் எண்ணிக்கை 1,202-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே சிந்து மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 23,507 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.