
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தை நெருங்கியது.
இதுகுறித்து அந்த நாட்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 99,927 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை விரையில் ஒரு லட்சத்தைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருக்கும் பிரிட்டனில் 37,048 போ் கரோனா நோய்க்கு பலியாகியுள்ளனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா நோய்க்கு உலகம் முழுவதும் 3,48,919 போ் பலியாகியுள்ள நிலையில், அவா்களில் 28 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் போ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்கள் என்று அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...