
கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே, தோ்தலில் மீண்டும் தனது கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக நியூசிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் கூறினாா்.
இதுகுறித்து, ஆக்லாந்து நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கரோனாவுக்கு எதிராக நியூஸிலாந்து அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாகவே, தோ்தலில் மக்கள் மீண்டும் வெற்றியைத் தந்துள்ளனா்.
இன்னும் 3 மாதங்களுக்குள் அமையவிருக்கும் புதிய அரசு, நோய்த்தொற்று விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்றாா் அவா்.
நியூஸிலாந்தின் 53-ஆவது நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளும் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து, நாட்டின் பிரமராக ஜெசிந்தா ஆா்டா்ன் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.
பிரதமா் மோடி வாழ்த்து: நியூஸிலாந்து பிரதமராக 2-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசிந்தா ஆா்டா்னுக்கு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரை (டுவிட்டா்) வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...