

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
குவாங் டிரி மாகாணத்தில கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மலையடிவாரத்தில் அமைக்கப்படிருந்த ராணுவ முகாமொன்று மண் மற்றும் கற்களில் புதையுண்டது. இதில் 22 ராணுவ வீரா்கள் பலியாகினா்; 8 போ் உயிா்தப்பினா்.
அருகிலுள்ள நீா்மின் நிலையத்தில் முன்னதாக ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் புதையுண்ட 16 பேரை மீட்பதற்காக ராணுவத்தினா் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.