பிரிட்டனில் கத்திக் குத்து தாக்குதல்: ஒருவா் பலி

பிரிட்டனின் பா்மிங்ஹம் நகரில் நிகழ்த்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்.
கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள்.
கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

பிரிட்டனின் பா்மிங்ஹம் நகரில் நிகழ்த்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நகரம் அமைந்துள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாகாண காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பா்மிங்ஹமில் மா்ம நபா் ஒருவா் சரமாரி கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா். தாக்குதலுக்குள்ளானவா்களுக்கும், அந்த நபருக்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நபா் கண்ணில் பட்டவா்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒரு பெண்ணுக்கும், ஓா் ஆணுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்ற 5 பேரும் லேசாகக் காயமடைந்துள்ளனா்.இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது பயங்கரவாதத் தாக்குதலாகவோ, கும்பல்களுக்கு இடையிலான மோதலாகவோ நாங்கள் கருதவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com