ரஷியா: புதிதாக 5,195 பேருக்கு தொற்று

ரஷியாவில் புதிதாக 5,195 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியா: புதிதாக 5,195 பேருக்கு தொற்று
Updated on
1 min read

ரஷியாவில் புதிதாக 5,195 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,195 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை முடிவகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இத்துடன், நாடு முழுவதும் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,25,505 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 61 போ், கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம், நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 17,820-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்து, அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,40,949-ஆக உள்ளது. 1,66,736 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெறறு வருகின்றனா். அவா்களில் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com