பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.16 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் , உருவான இடத்தில் இருந்து 67 கி.மீ தொலைவில் 69 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் தவுலத் மாவட்டத்தில் நடுக்கம் காரணமாக பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர் .
மேலும் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அதிர்வுகளை வெளிப்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.