ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தானில் ராணுவத் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் மிர் அலி நகரில் புதன்கிழமை நடந்த ராணுவத் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 பிப்ரவரி 2021, 10:01 am

DIN

பாகிஸ்தானின் மிர் அலி நகரில் புதன்கிழமை நடந்த ராணுவத் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிர் அலி நகரில் தீவிரவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை அந்தப் பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்தினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குடியிருப்பு வளாகத்திற்குள் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது ராணுவப் படையைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் இராணுவம் சமீப காலமாக வடக்கு வஜீரிஸ்தானில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.