ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3.8 மில்லியனை நெருங்குகிறது.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா ஆப்பிரிக்க நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இங்கு கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3.8 மில்லியனை நெருங்குகிறது.
அந்தவகையில், இதுவரை 37,99,029 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்க மையங்கள் தெரிவித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 1,00,359 பேர் பலியாகியுள்ளனர்.
இவற்றில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் 48,708 பேர் பலியாகியுள்ளனர். மேலும் எகிப்தில் 10,201 பேரும், மொராக்கோவில் 8,524 பேரும் அந்த வைரஸால் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3,349,323 பேர் குணமடைந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


