மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்: 100 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்: 100 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்: 100 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் பயங்கரவாத அமைப்பினர் நடத்தியத் தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் பயங்கரவாத அமைப்பினர் நடத்தியத் தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது நைஜர். இதன் தலைநகர் நியாமியில் கடந்த சனிக்கிழமை இரண்டு கிராமங்களில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 100 பேர் வரை பலியாகிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.  

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதமர் பிரிஜி ரபினி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். 

அல்-கைதாவுடன் தொடர்புடைய நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட போகோ ஹராம் தீவிரவாதக் குழு தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com