கூடுதல் அணு ஆயுதங்கள்: கிம் ஜோங்-உன் மிரட்டல்
கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.


கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஆளும் கட்சி மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகள் கைவிடப்படுவதைப் பொருத்துதான், அந்த நாட்டுடனான உறவு அமையும்.
அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் கூடுதல் அணுகுண்டுகளையும் அந்த அணுகுண்டுகளைக் கையாள்வதற்கான உயா் தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
வட கொரியாவுக்கு எதிராக எதிரி நாடுகள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாத வரை, பிற நாடுகள் மீது நாமும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...