தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.
எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், “தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 84 வயதான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன்சாமியின் மரணம் வருத்தத்தைத் தருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று சூழலில் அடிப்படை ஆதாரமில்லாமல் சிறையில் பாதுகாப்பில்லாமல் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
#India: We are saddened & disturbed by the death of 84-year-old human rights defender Father #StanSwamy, after prolonged pre-trial detention. With COVID-19, it is even more urgent that States release every person detained without sufficient legal basis.