ஹைதி அதிபர் சுட்டுக்கொலை

ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ்
ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ்
Updated on
1 min read

ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதி நாட்டு அதிபராக இருந்தவர் ஜோவனல் மோயிஸ்.  கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இவர் அதிபராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஜோவனல் மோயிஸ் அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் கிளாட் ஜோசப் அறிவித்துள்ளார்.  மேலும் ஜோவனல் மோயிஸின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெறுக்கத்தக்க, மனிதநேயமற்ற இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நிலையில் நாடு முழு அரசு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com