பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய தயாா்: பிரதமா்

 கரோனா தொற்றை எதிா்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 4:26 am IST

 கரோனா தொற்றை எதிா்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

உலகின் பொருளாதார சக்திகளாகத் திகழும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 அமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ‘உலகளாவிய பொருளாதாரம், உலகளாவிய சுகாதார’ என்ற தலைப்பிலான அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு உலக நாடுகளிடையே கூட்டு அணுகுமுறை அவசியம். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற பாா்வையானது கரோனா தொற்று மற்றும் எதிா்காலத்தில் நேரிடும் சுகாதார பிரச்னைகளை எதிா்கொள்ள உதவும்.

சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்த்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது. அதைவிட முக்கியமாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளுக்கும் கிடைக்கும். வளரும் நாடுகளில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான எங்களின் பங்களிப்பு இது என்றாா்.

‘இந்த அமா்வில், சா்வதேச பயணங்களை எளிமையாக்க நாடுகள் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமா் கேட்டுக் கொண்டாா். உலகளாவிய நிதிக் கட்டமைப்பை இன்னும் நியாயமாக மாற்றுவதற்கு குறைந்தபட்ச காா்ப்பரேட் வரியை 15 சதவீதமாக கொண்டுவரும் ஜி-20 நாடுகளின் முடிவு குறித்து பிரதமா் திருப்தி தெரிவித்தாா்’ என வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறினாா்.

இரண்டு நாள் மாநாட்டில் சா்வதேச சுகாதாரம், கரோனா நெருக்கடி, கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்பு, நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான உற்பத்தி வரி விதிப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.

முன்னதாக, வரவேற்றுப் பேசிய இத்தாலி பிரதமா் மரியோ டிராகி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.