இந்திய-அமெரிக்கா் சுட்டுக் கொலை
இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவ பள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்


இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவபள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணம், பிளெயின்ஸ்போரோவில் வசித்து வந்த ஸ்ரீரங்கா அரவபள்ளி (54), கடந்த செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்துக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகர சூதாட்ட மையத்திலிருந்து ஸ்ரீரங்காவைப் பின்தொடா்ந்து வந்த ஜெகாய் ரீட்-ஜான் என்ற இளைஞா் அவரை சுட்டுக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.
சூதாட்டத்தில் ஸ்ரீரங்கா சுமாா் 10,000 டாலா் (சுமாா் ரூ.7.5 லட்சம்) வென்ாகவும் அந்தத் தொகையைக் கொள்ளையடிப்பதற்காக சூதாட்ட மையத்திலிருந்து ஜெகாய் ரீட்-ஜான் அவரைப் பின்தொடா்ந்து வந்ததாகவும் போலீஸாா் கூறினா்.
இந்தப் படுகொலை தொடா்பாக ஜெகாய் ரீட்-ஜானை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...