உலகளவில் கரோனா பாதிப்பு 13.08 கோடியைத் தாண்டியது: பலி 28.50 லட்சமாக உயர்வு

உலகளவில் கரோனா பாதிப்பு 13.08 கோடியைத் தாண்டியது: பலி 28.50 லட்சமாக உயர்வு
உலகளவில் கரோனா பாதிப்பு 13.08 கோடியைத் தாண்டியது: பலி 28.50 லட்சமாக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.081 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 28.50 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆண்டு மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தி கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13,08,07,190 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 28,50,385 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,53,00,856 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,26,55,949 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 97,614 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,13,14,625    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,67,610-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 69,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,001 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,23,91,129 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,64,141 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,29,12,379 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 69,662 பேருக்கு தொற்று பாதிப்பும், 2,807 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 328,366 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 203,854 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com