இந்தோனேசியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவின் நோய்த் தொற்றுக்கு ஆளாகி 640 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு நேற்று ( புதன்கிழமை) அளித்த தகவலில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 640 மருத்துவர்கள் கரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதில் 535 ஆண் மருத்துவர்களும், 105 பெண் மருத்துவர்களும் அடக்கம் . அவர்களில் பொதுசிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 347 பேர் என்றும் , சிறப்பு மருத்துவர்கள் 284 பேர் எனத் தெரிவித்தனர்.
கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கிழக்கு ஜாவாவில் 140 மருத்துவர்களும் , மத்திய ஜாவாவில் 96 பேரும் , ஜகர்தாவில் 94 பேரும் , மேற்கு ஜாவாவில் 94 பேரும் இறந்திருக்கிறார்கள்.
இதுவரை இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30.80 லட்சம் பேர். அதில் உயிரிழந்தவர்கள் 80,598 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.