ஒமைக்ரான் வகை கரோனா, டெங்கு ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் அந்த நாட்டில் 4,000 பேருக்கு டெங்கு ஏற்பட்ட நிலையில், வரும் மாதங்களில் நாடு முழுவதும் அந்தக் காய்ச்சல் பரவல் தீவிரமடையும் அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே அங்கு ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.