டெல்டா வகை கரோனாவைவிட ஒமைக்ரான் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், டெல்டாவைவிட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:
டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் மற்றவா்களுக்குத் தொற்றி, பல்கிப் பெருகுவது தெரிய வந்தது.
இருந்தாலும், அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமைக்ரான் டெல்டாவைவிட மிகக் குறைவாகவே நுரையீரலைத் தாக்குவதும் ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
இந்தோனேசியாவில் முதல்முறை: இதற்கிடையே இந்தோனேசியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் வகைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளா் ஒருவருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்றுநோய் புள்ளிவிவரங்களை அளிப்பதற்கான ஜிஐஎஸ்ஏஐடி-யின் புள்ளவிவரத்தின் அடிப்படிப்படையில், வியாழக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 6,951 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள முன்னாள் முதல்வா் மகளின் வங்கி லாக்கரில் சோதனை: பண முறைகேடு வழக்கில் நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு







