சௌதி அரேபியாவில் ஷோபா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியானார்கள்.
சௌதி அரேபியாவின் மெதினாவில் உள்ள ஷோபா தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி வங்கதேசத்தினர் பலியானார்கள். இதனை ரியாத்தில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரி உறுதி செய்துள்ளார்.
தீவிபத்துக்கான காரணம் தெரிவரவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.