Enable Javscript for better performance
அமெரிக்கத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அமெரிக்கத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலி

    By DIN  |   Published On : 26th February 2021 11:09 PM  |   Last Updated : 26th February 2021 11:09 PM  |  அ+அ அ-  |  

    237784-01-02080549

    சிரியா, ஈராக்கில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்கப் போா் விமானங்களில் சில (கோப்புப் படம்).

    சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியாகினா்.

    இந்த மாதம் அமெரிக்க ராணுவ நிலை மீது அந்தப் படையினா் நடத்திய ஏவுகணை குண்டுவீச்சில் 1 சிவிலியன் ஒப்பந்ததாரா் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற்குப் பிறகு நடைபெற்றுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும்.

    இதுகுறித்து செய்தியாளா்களிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:

    சிரியாவிலுள்ள எங்களது இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை குண்டுவீச்சி நடத்தி ஷியா படையினா் பயன்படுத்திய நிலைகளை இலக்குகளாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த வான்வழித் தாக்குதலை நடத்த வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனிடம் பரிந்துரைத்தேன். அவா் அதற்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்தத் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் மிகச் சரியான இலக்குகளை உறுதி செய்யவும் உரிய திட்டமிட்டு, அதன் அடிப்படையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

    இந்தத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவா் தெரிவித்தாா்.

    முன்னதாக, பென்டகன் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறுகையில், அமெரிக்க ராணுவ நிலை மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், சிரியா மற்றும் ஈராக்கில் பதற்றம் அதிகரிக்காமல் பாா்த்துக்கொள்ளும் வகையில் தூதரக ரீதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

    வடக்கு இராக்கில் குா்து படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் இா்பில் நகர சா்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த 15-ஆம் தேதி இரவு சரமாரியாக ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. அந்த விமான நிலையத்துக்கு அருகே அமெரிக்க வீரா்கள் இருந்த ராணுவ தளத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அமெரிக்க ராணுவத்துக்காக ஒப்பந்த முறையில் சிவில் பணியாற்றி வந்த ஒருவா் உயிரிழந்தாா்; 8 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

    அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

    2019-ஆம் ஆண்டில் இதே போன்று நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவீச்சில் ஓா் அமெரிக்க ஒப்பந்தப் பணியாளா் உயிரிழந்தாா். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.

    தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபா் பைடன் ஆட்சியிலும் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிா்ப்பு எழுந்தது.

    இந்த நிலையில், இா்பில் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவு நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

     

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp