ஆப்கனில் துப்பாக்கிச்சூடு: 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலி

ஆப்கனில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலியானார்கள். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆப்கனில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலியானார்கள். 
ஆப்கனின் சொர்க்ஹோர்ட் மாவட்டத்தில் நேற்றிரவு தொழிற்சாலை பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பணியாளர்கள் பலியானார்கள். 
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிவரவில்லை. 
எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com