ரஷியாவில் தனியார் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.
ரஷியாவில் பெர்ம் பகுதியில் உள்ள மரத்திலான மாடி வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள். தீவிபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.