
மத்திய ஆசிய நாடான கிா்கிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,249-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 8 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,695-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, கிா்கிஸ்தானில் 93,302 போ் கரோனாவிலிருந்து முழமையாக குணமடைந்துள்ளனா். 5,252 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 85 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.