காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் பருவநிலை குறித்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அவர் பேசியதாவது, தூய்மை இந்தியா, குடிநீர் குழாய் இணைப்பு போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர்,
காலநிலை மாற்றம் குறித்த புரிதலை உறுதி செய்ய பள்ளிகளில் இது தொடர்பான பாடப் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.