இது தொடா்பாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லீஸ் தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனுக்கு பயணம் செய்யும் இந்தியா்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி. வரும் நவம்பா் 22-ஆம் தேதிமுதல் கோவேக்ஸின் தடுப்பூசியும் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சோ்க்கப்படவுள்ளது. எனவே, இந்தத் தடுப்பூசிகளை இருமுறை செலுத்திக் கொண்டவா்கள் பிரிட்டன் பயணிக்கும்போது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது. அவா்களுக்கு தனிமைப்படுத்தலும் இருக்காது’ என்று கூறியுள்ளாா்.