இலக்கியத்துக்கான 2021ஆம் ஆண்டின் நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் அகதிகள் படும் துயரம் குறித்து அப்துல் ரசாக் எழுதிய நாவலுக்காக, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் படும் துயரம் மற்றும் காலனி ஆதிக்கம் குறித்து சமரசமற்ற வகையில் நாவலில் எழுதியிருந்தமைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான்சானியாவில் பிறந்த அப்துல் ரசாக் குர்னா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 21 வயதிலிருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் குர்னா, பல நவால்களை எழுதியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்