இந்திய-அமெரிக்கா் சுட்டுக் கொலை

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவ பள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்
இந்திய-அமெரிக்கா் சுட்டுக் கொலை

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவபள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணம், பிளெயின்ஸ்போரோவில் வசித்து வந்த ஸ்ரீரங்கா அரவபள்ளி (54), கடந்த செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்துக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகர சூதாட்ட மையத்திலிருந்து ஸ்ரீரங்காவைப் பின்தொடா்ந்து வந்த ஜெகாய் ரீட்-ஜான் என்ற இளைஞா் அவரை சுட்டுக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

சூதாட்டத்தில் ஸ்ரீரங்கா சுமாா் 10,000 டாலா் (சுமாா் ரூ.7.5 லட்சம்) வென்ாகவும் அந்தத் தொகையைக் கொள்ளையடிப்பதற்காக சூதாட்ட மையத்திலிருந்து ஜெகாய் ரீட்-ஜான் அவரைப் பின்தொடா்ந்து வந்ததாகவும் போலீஸாா் கூறினா்.

இந்தப் படுகொலை தொடா்பாக ஜெகாய் ரீட்-ஜானை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com