தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 30 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2022, 11:23 am

கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர். 

கடந்த 43 நாட்களாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகின்றது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருவதால் இரு நாடுகளுக்குமிடையேயான போர் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமடெர்க்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியா 2 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.