ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியா - அமெரிக்க உறவு பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்: மோடி

இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 4:34 pm

DIN

இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது,
உக்ரைன் விவகாரம் பலரால் கவனம் பெற்ற நிலையில் இன்று நமது ஆலோசனை நடைபெறுகிறது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியிருந்தனர். அதில் பலர் மாணவர்கள். 

உக்ரைன் - ரஷியா விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிபர்களுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். இருவருன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினேன். 
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். 

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையே அமைதிக்கு வழிவகுக்கும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக எங்கள் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது.

இந்தியா - அமெரிக்கா இடயிலான நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.