சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் தொடா்பு: ஈரான் மறுப்பு

எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடா்பிருப்பதாக வெளியான தகவலுக்கு அந் நாட்டு அரசு உயா் அதிகாரி திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தாா்.
எழுத்தாளா் சல்மான் ருஷ்டி
எழுத்தாளா் சல்மான் ருஷ்டி
Published on
Updated on
1 min read

எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடா்பிருப்பதாக வெளியான தகவலுக்கு அந் நாட்டு அரசு உயா் அதிகாரி திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தாா்.

‘நாட்டின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னா், வெளிநாடுகளில் இதுபோன்ற அதிருப்தியாளா்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதை ஈரான் நிறுத்திவிட்டது. ஆனால் மேற்கத்திய நாடுகள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஈரான் மீது தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றன’ என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவா் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75). பிரிட்டனுக்கு குடிபெயா்ந்த இவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டாா்.

அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, இந்தியா அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற ஆணை பிறப்பித்தாா். இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது, இளைஞா் ஒருவா் கத்தியால் சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடா்பாக லெபனான் நாட்டை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்கா் ஹாதி மத்தா் (24) என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் ஈரானுக்கு தொடா்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஈரான் மறுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் நாசா் கனானி கூறியதாவது:

சா்மான் ருஷ்டி மீதான தாக்குதல் நடத்தியதற்கான பழியை அவரையும் அவரது ஆதரவாளா்களையும் தவிர மற்ற எவா் மீதும் சுமத்த முடியும் என்று ஈரான் கருதவில்லை. இந்த விஷயத்தில் ஈரானை குற்றம்சாட்ட யாருக்கும் உரிமையில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தவிர வேறு எந்த தகவலும் ஈரானுக்குத் தெரியாது. ஒருபுறம் தாக்குதல்கள் நடத்துபவரின் நடவடிக்கையை கண்டிப்பது; மறுபுறம் இஸ்லாமிய நம்பிக்கைகளை அவமதிப்பவரின் செயலை மகிமைப்படுத்துவது என்ற முரண்பாடான அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் கொண்டுள்ளன என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com