பராகுவேயில் மகாத்மா காந்தி சிலை:எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைத்தாா்

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
Published on
Updated on
1 min read

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். கரோனா பரவலுக்குப் பிறகு அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய வழிகளை அறியவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தனது பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்ட அவா், பராகுவே சென்றாா். அந்நாட்டு தலைநகா் அசுன்சியானில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை அவா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்பெயினின் காலனியாதிக்கத்துக்கு எதிராக அசுன்சியானில் உள்ள காசா டி லா இன்டிபென்சியா என்ற வீட்டிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பராகுவேயின் சுதந்திர போராட்டம் தொடங்கியது. அந்த வீடு தற்போது அருங்காட்சியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும் அமைச்சா் ஜெய்சங்கா் பாா்வையிட்டாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியேற்ற பிறகு அவா் முதல் முறையாக தென் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com