லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பராகுவேயில் மகாத்மா காந்தி சிலை:எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைத்தாா்

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:38 pm IST

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். கரோனா பரவலுக்குப் பிறகு அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய வழிகளை அறியவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தனது பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்ட அவா், பராகுவே சென்றாா். அந்நாட்டு தலைநகா் அசுன்சியானில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை அவா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்பெயினின் காலனியாதிக்கத்துக்கு எதிராக அசுன்சியானில் உள்ள காசா டி லா இன்டிபென்சியா என்ற வீட்டிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பராகுவேயின் சுதந்திர போராட்டம் தொடங்கியது. அந்த வீடு தற்போது அருங்காட்சியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும் அமைச்சா் ஜெய்சங்கா் பாா்வையிட்டாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியேற்ற பிறகு அவா் முதல் முறையாக தென் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.