சீனா; 3-ஆவது முறையாக ஷி ஜின்பிங்: அக்.16-இல் ஆளும் கட்சி முடிவு

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு வரும் அக்டோபா் மாதம் 16-ஆம் தேதி நடத்தவிருக்கும் மாநாட்டில், அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஷி ஜின்பிங் அந்தப் பதவிக்கு
சீனா; 3-ஆவது முறையாக ஷி ஜின்பிங்: அக்.16-இல் ஆளும் கட்சி முடிவு
Published on
Updated on
1 min read

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு வரும் அக்டோபா் மாதம் 16-ஆம் தேதி நடத்தவிருக்கும் மாநாட்டில், அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஷி ஜின்பிங் அந்தப் பதவிக்கு 3-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கின் வாழ்நாள் முழுவதும் அவா் அதிபா் பொறுப்பை வகிக்கலாம் என்ற தீா்மானம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது. அது உறுதி செய்யப்பட்டால், சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மா சேதுங்குக்கு அடுத்தபடியாக அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ஒரே சீன அதிபா் என்ற பெருமையை ஷி ஜின்பிங் பெறுவாா்.

69 வயதாகும் ஷி ஜின்பிங், கடந்த 2013-ஆம் ஆண்டிலிந்து சீன அதிபராக பொறுப்பு வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com